செவ்வாய், 28 ஜூலை, 2015

கற்பனை ஆடை



ஒரு மன்னரின் அரண்மனைக்கு ஒரு துணி நெய்பவன் இரண்டு மூன்று அடிபொடிகளுடன் வந்தான்... மன்னரை சந்திக்க அனுமதி கேட்டான்... உடன் வந்த அடிபொடிகள் "உலகிலேயே அழகான ஆடைகளை நெய்வதில் இவர்தான் வல்லவர் என்றும்... உலக பேரரசர்கள் எல்லாம் இவர் நெய்த ஆடைகளைத்தான் அணிந்திருகிறார்கள் என்றும்... பற்பல கோயில் மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் இவர் நெய்யும் ஆடையை அணிவித்து பூஜை செய்தால்தான் அந்த பூஜையே நிறைவடைகிறது என்றும் இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகழுரைகளை சொன்னார்கள்...

அரசனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் ஆசை எட்டிப்பார்த்தது.. ஒருவேளை இந்த ஆள் நெய்த ஆடையை அணியவில்லை என்றால் நாம் பேரரசர் இல்லையோ.. என்ற சந்தேகம் வர தனக்கும் ஒரு ஆடையை நெய்து தர சொல்லி கேட்டார்... பல லட்சங்கள் ஆகும் என்று சொன்ன அந்த நெசவாளி கஜானாவில் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டான்... ஒரு மாதம் கழித்து அரண்மனைக்கு வெறும் கையேடு வந்தான்...

ஆடை எங்கே.. என்று அரசர் கேட்டார்... இதோ கொண்டு வந்திருக்கிறேன் அரசே.. என்று வெறும்கையை தூக்கி காட்டினான்... அரசருக்கு கோபம் வந்தது.. என்ன விளையாடுகிறாயா.. வெறும் கையை காட்டி ஆடை இருக்கிறது என்கிறாயே....?? என்றார்..
இல்லை அரசே.. இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது... முட்டாள்களின் கண்ணுக்கு இந்த ஆடை தெரியாது.. என்று சொன்னான்... அரசரும், சபையில் இருந்தோரும்.. அடடா.. ஆடை நம் கண்ணுக்கு தெரியவில்லை என்று சொன்னால் நம்மை முட்டாளாக்கி விடுவார்களே.. என்று பயந்து ஒவ்வொருவரும் "இல்லாத" ஆடையை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள்... ஆஹா ஆஹா.. பட்டு ஜரிகை வேலை எவ்வளவு அற்புதமாக வந்திருகிறது.. என்றார் ஒருவர்.. பலே,, பலே... அதில் செய்யப்பட்டிருக்கும் முத்து வேலைகளும் ஜரிகை ஓவியங்களும் கண்ணை கவர்கின்றன.. என்றார் ஒருவர்... அட அட.. இதுபோன்ற நவரத்தின வேலைப்பாட்டை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றார் ஒருவர்... இன்னொருவர்.. இதை மட்டும் அணிந்துகொண்டால் நீங்கள்தான் உலகில் மிகச்சிறந்த ஆடையை அணிந்த அரசர் ஆவீர்கள் என்றார்..

எல்லோரும் சொல்ல சொல்ல.. கடைசியில் வேறு வழி இல்லாமல் மன்னரும் ஒப்புக்கொண்டார்.. ஆமாம் ஆமாம் .. ஆடை அழகாகத்தான் இருக்கிறது... என்றார்.. உடனே நெசவாளி.. இந்த உடையை இப்போதே நான் உங்களுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் மகா ராஜா என்றான்... வேறு வழி இல்லாத மன்னரும் உடுத்தி இருந்த ஆடையை அவிழ்த்துவிட்டு கற்பனையான ஒரு ஆடையை அணிவதுபோல பாவனை செய்து சபையில் நிர்வாணமாக நின்றார்...

நான்காம் வகுப்பிலோ,ஐந்தாம் வகுப்பிலோ படித்த ஒரு கதை இது... இப்போது இந்த கதைக்கு என்ன அவசியம்????

அந்த மன்னர்... ஈழ தமிழ் மக்கள்..
அந்த நெசவாளி - புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் குடியேறி வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு "நாடுகடந்த அரசு" நடத்தும் பெரும் பணக்கார இலங்கை தமிழர்கள்.. மற்றும் சீமான், நெடுமாறன் போன்ற ஈழ வியாபாரிகள்

அந்த "இல்லாத" ஆடை - ஈழம்

அந்த அடிபொடிகள் - சீமான், வைக்கோ,நெடுமாறன் போன்றோரின் தமிழக தொண்டர்கள்

எதுவுமே புரியாமல் மலங்க மலங்க விழித்தவர்கள் - நம்மூர் தமிழர்கள்..

அட அப் பாவிங்களா... இல்லாத ஆடையை கற்பனை செய்து அணிந்து நிர்வாணமாக நின்ற அந்த மன்னனுக்கும்.. உருவாகாத ஒரு நாட்டை "ஈழம் ஈழம்" என்று சொல்லி அதில் அரசியல் பிழைப்பு நடத்தும் நெடுமாறன், சீமான் போன்ற அல்லைகைகளை நம்பி நிர்வாணமாக திரியும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக