திங்கள், 27 ஜூலை, 2015

ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்ற தடை - சில கேள்விகள்



ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகளை கொடுமை செய்கிறார்கள்.. அதனால் அந்த போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து "இனிமேல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கூடாது" என்ற தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள்.... விலங்குகள் நல ஆர்வலர்கள்...

உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்றாலும் வழக்கம் போல எதையும் செய்ய முடியாத சாமான்யனாய் சில சந்தேகங்கள் வரத்தான் செய்கிறது....

1) இந்த வழக்கை தொடுத்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோருமே நூறு சதவிகித சைவ உணவு உண்பவர்களா???

2) அப்படியே அவர்கள் சைவ உணவு உண்பதே வைத்துக்கொண்டாலும் மாடுகள் உழவு செய்யாமல் , பாரவண்டி இழுக்காமல் தான் அந்த உணவு பொருட்கள் இவர்களை வந்தடைகிறதா ???(மாடுகளை காயடித்து அதன் சந்ததி பெருக்கத்தையே நிறுத்தினால் மட்டுமே அதை உழவுத்தொழிலிலோ, பார வண்டி இழுக்கவோ பயன்படுத்த முடியும்.. காயடிபதை விடவா ஒரு பெருங்கொடுமை உண்டு..??????)

3) ஜல்லிக்க்கட்டு காளைகளை வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விட்டு அதிக பட்சம் பத்து நிமிடங்களுக்குள்ளாக அது பட்டியை விட்டு வெளியே போய் விடும்... இந்த பத்து நிமிடத்தில் அதனை பிடிக்க பத்து பதினைந்துபேர் முயல்வார்களே,,, அவர்களில் யாரும் கட்டை, கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் அந்த மாடுகளை கொடுமை படுத்துகிறார்களா????

4) ஜல்லிக்கட்டுக்களுக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு போஷாக்காக கொடுக்கப்படும் தீவனங்கள், கவனிப்புகள் அந்த மாடுகள் அந்த போட்டிகளுக்காக இல்லை என்றால் கூட கிடைக்கும் என்று அந்த வழக்குத்தொடுத்தவர்களால் உறுதியளிக்க முடியுமா????

5) காயடிக்காத மாடுகளை மற்ற தொழில்களில் ஈடுபடுத்த முடியாது ( பசுமாடுகளை சினைப்படுத்தும் வேலையை தவிர) இவ்வளவுகாலம் ஜல்லிக்கட்டுக்கென காயடிக்காமல் வளர்த்து கொழு கொழு என்று இருக்கும் மாடுகள், இனிமே அந்த போட்டிகளுக்கு உதவாதென்றால் அதனை வளர்த்தவர்கள் விற்பனை செய்ய தான் முயல்வார்கள்... அப்படி விற்பனையாகும் மாடுகளை வாங்குபவர்கள் கறிக்காக அதனை வெட்டுவார்கள்... ஆக.. பத்து பதினைந்து இளைஞர்கள் அதனை மடக்குவதை கொடுமை என்று சொன்ன அந்த ஆர்வல புடுங்கிகள் அந்த மாடுகளின் உயிருக்கு உத்திரவாதம் தர முடியுமா?????

கடைசியா ஒரு சாமான்யனா எங்கூர் பக்கம் சொல்ற ஒரு சொல்வழக்கோடு என் சந்தேகங்களை இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன்...

"மேயிற மாட்ட கெடுத்துச்சாம் நக்குற மாடு..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக