செவ்வாய், 28 ஜூலை, 2015

சூர்யா சென்... - SURYA ZEN



சுஸ்மிதா சென் தெரியும்... ரியா சென் தெரியும்... ரியா சென்னோட அம்மா மூன் மூன் சென் கூட தெரியும்... இன்னும் கொஞ்ச பேருக்கு கூடுதலா அமர்த்தியா சென் தெரியும்....

சூர்யா சென் யாருன்னு தெரியுமா???

இன்னிக்கு நாம எல்லோருமே கொண்டாடுற அன்றைய தீவிரவாதி (???- ஆங்கிலேய அரசாங்கம் அப்படித்தான் சொன்னுச்சு) சுபாஷ் சந்திரபோஸ் "இந்திய தேசிய ராணுவம் " (INA) ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே "இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி" அப்படின்ற சுதந்திர போராட்ட குழுவ அமைச்சவர்தான் இந்த சூர்யா சென்...

சூர்யா சென் ஒரு வாத்தியார்.. அதனால அவர எல்லோரும் "மாஸ்டர்தா"ன்னு சொல்வாங்க... காந்தியடிகளோட அமைதி வழி போராட்டத்தால் சுதந்திரம் வாங்க முடியாது.. வெள்ளைக்காரங்கள அடிச்சு தான் தொரத்தனும்.. அப்படின்னு ஒரு நோக்கத்தோட தன்னிடம் படிச்ச மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆயுத போராட்ட குழுவ ஆரம்பிச்சார்.. அதுக்கு ஆளுங்கள எப்படி தேர்ந்தெடுத்தார் தெரியுமா??

ஒரு நாள் நடு ராத்திரி ஒரு சுடுகாட்டுக்கு வந்து தன்னை சந்திக்க சொன்னார்.. அப்படி யாருக்கேலாம் நடுராத்திரில சுடுகாட்டுக்கு வர தைரியம் இருந்துதோ.. அவங்கள எல்லாம் சேர்த்தார்.. மொத்தம் 63 பேர் சேர்ந்தாங்க.. ஓரிரு பெண்கள் உட்பட...

வெள்ளைகாரன அடிச்சு துரத்த நம்மூர்ல இருந்த போர்கருவிகளான ஈட்டி, வாள் எல்லாம் ஒத்துவராது... நமக்கும் துப்பாக்கி வெடி மருந்து எல்லாம் வேணும்னு முடிவு பண்ணி , வெள்ளைக்காரங்களோட ஆயுதக்கிடங்க கொளையடிக்க திட்டம் போட்டாங்க...

ஒரு லீவு நாள்ல அந்த கொல்லைக்கு நாள் குறிச்சு சிட்டகாங் அப்படின்ற இடத்துல இருந்த ஆயுத கிடங்குமேல தாக்குதல் நடத்தினாங்க... ஆனா துரதிஷ்டவசமா அந்த தாக்குதல்ல எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல..

அப்புறம் சிலபல ஒளிவு மறைவு யுத்தங்களுக்கு பிறகு சூர்யா சென் அப்படின்ற அந்த மாபெரும் போராளிய ஆங்கிலேய அரசாங்கம் கைது பண்ணி நகத்தை எல்லாம் புடுங்கி, பல்ல எல்லாம் புடுங்கி வங்காளத்துல இருந்த சௌலியாகஞ்ஜ் ஜெயில அடைச்சு வச்சு 1934- ஜனவரி மாதம் 12 ம் தேதி தூக்குல போட்டுட்டாங்க... அப்படி தூக்குல போட்ட உடம்ப கூட வங்காள விரிகுடா கடல் ல வீசிட்டாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக