செவ்வாய், 28 ஜூலை, 2015

ஒரு ஆலோசனை...


டெக்னிகலாக எனக்கு அவ்வளவு விபரம் தெரியாது.. ஆனால் அனுபவ அறிவு கொஞ்சம் இருப்பதால் சொல்கிறேன்.. இதனை எவ்வளவு டெவலப் செய்து உபயோகத்திற்கு கொண்டுவரலாம் என்பதை சம்மந்தப்பட்ட துறையில் இருக்கும் நண்பர்கள் சொல்லலாம்...

நமது மொபைல் போன், கேமரா, டார்ச் லைட், எமர்ஜென்சி லைட் போன்ற ரீசார்ச் செய்யும் சாதனங்களின் பேட்டரி மிக விரைவில் பழுதடைந்து விடுகின்றன.. இதற்கு காரணம் தமிழகத்தில் மின்வாரிய கோளாறுகள் என்பதை நான் ஏற்கெனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன்... மாறுபட்ட மின்னூட்ட அளவுகளால் (LOW VOLTAGE & HI VOLTAGE ) திடீர் திடீரென மின்னழுத்தம் (AMPS) ஏறி இறங்குவதால் அந்த மின்சாதனங்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன...

வீட்டில் உபயோகிக்கும் பெரிய மின் சாதனங்களுக்கு (டி வி , பிரிட்ஜ், வாஷிங் மெஷின் , ஓவன் ) நாம் ஸ்டெப்லைசர் எனப்படும் மின் சீராக்கிகளை உபயோகிப்போம்.. ஆனால் சிறிய சாதனைகளுக்கு ( மேற் குறிப்பிட்ட றீ சார்ஜ் செய்யும் உபகரணங்கள்) அவ்வாறு செய்வதில்லை..

இப்போது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இன்வெட்டர் என்று சொல்ல கூடிய பின் சேமிப்பு கலங்களை உபயோகிக்கிறார்கள்... அதில் இருந்து கிடைக்கும் மின்சாரமானது சீராக கிடைக்கும்.. (அது நன்றாக சார்ஜ் ஆகி இருக்க வேண்டும்) எனவே அப்படி ரீ சார்ஜ் செய்யும் உபகரணங்களை ஒரு தனி பிளக் பாயின்ட் வைத்து அந்த இன்வெர்டர் மின்சாரத்தில் சார்ஜ் செய்யும் போது பேட்டரி ஆயுள் கூடும்...

பெரிய அளவில் இல்லாமல் சிறிய கார் பேட்டரிகளை உபயோகித்து சார்ஜ் செய்வதற்கான உபகரணங்களை வியாபார முறையில் கூட உற்பத்தி செய்யலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக