செவ்வாய், 28 ஜூலை, 2015

உங்கள் முகமூடிக்கு பின் இருக்கும் முகம் எது?

"நாராயணன் கிருஷ்ணன்"

2010 ஆம் ஆண்டு ஊடகங்கள்-பத்திரிகைகள்- சமூக வலைத்தளங்களில் இந்த பெயர் தீ போல பரவியது...1981ல் பிறந்து வெளிநாட்டில் வேலை கிடைத்த பின்பும் கூட மதுரையில் இருக்கும் மனநலம் குன்றியோர்-ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் நோக்கில் வெளிநாட்டு வேலையை புறக்கணித்த இளைஞர்... உலகின் தலைசிறந்த பத்து மனிதர்களுள் ஒருவராக சி என் என் தொலைக்காட்சி இவரையும் தேர்ந்தெடுத்து கவுரவித்தது... அப்படி தேர்வு செய்ய இணையதளங்களில் வாக்கெடுப்பு நடத்தியது...


ஒரு இளைஞன்.. அதுவும் தமிழன்.. அதுவும் தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு உலகப்புகழ் பெற போகிறார் என்ற உடன்.. வெளிநாட்டில் கூலிக்கு வேலைக்கு வந்த தமிழனான எனக்கு வெட்கமாக இருந்தாலும்... அவன் நம்மூர்காரன் என்ற பெருமையோடு நிறைய நிறைய நண்பர்களை இணையத்தில் வாக்களிக்க சொல்லி நேரடியாகவும், ஃ பேஸ்புக் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன்.. சிலர் என் கண் முன்னாலேயே வாக்களித்தனர்.. பலர் எனக்கு தெரியாமல் வாக்களித்திருக்கலாம்...

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை போல.. மனநலம் குன்றியோரையும்-ஆதரவற்றோரையும் இவன் தனது வலைக்குள் கொண்டு வரும் தந்திரமே அப்படி தேடி தேடி போய் சோறு ஊட்டியது என்றும்.. அப்படி தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவந்தவர்களின் உயிரை பறித்து உடல் உறுப்புகளை விற்று வருகிறான் என்று தகவல் கேள்விப்பட்டதும்.. அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை...

எவன நம்புறதுன்னே தெரியலையே... கடவுளே.. என்று என்னை நானே நொந்துகொண்டேன்...

அந்த நாராயணன் கிருஷ்ணனை பற்றி செய்தி தாள்களில்தான் படித்தோம்...

இங்கே ஃபேஸ்புக்கில் சிலர் மிகவும் மரியாதைக்குரியவர்கள் என்று நான் நம்பிக்கிடந்தேன்... நல்லவர்கள் என்று நினைத்தேன்... ஆனால் சமீப காலமாக அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்.. இவரிடம் பொருள் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று கேள்விப்படும்போது ஏற்படும் அதிர்ச்சியை தவிர்க்கவே முடியவில்லை...

நீங்களா...??????? நீங்களா இப்படி.. ?????????????/ நீங்களுமா இப்படி...????????????????

எப்படிப்பா.. நல்லவன்ற முகமூடிக்குள்ள இருக்க உங்க உண்மை முகத்த கண்டுபிடிக்கறது???

கடவுளே.... யாரை நம்புறது... யாரை சந்தேகப்படுறது?? இதுக்கு ஒரு தீர்வே இல்லையா.... cry emoticon


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக