திங்கள், 27 ஜூலை, 2015

நெருப்பின் அடித்தளம்

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் சுமார் 15-16 வயதில் தான் பருவமெய்தினார்கள்.. ஆனால் நவீன உணவுகளையும் , ரசாயனக்கலவை நிரம்பிய உணவுகளையும் உட்கொண்டால்தான் அவர்கள் நாகரீகமானவர்கள் என்ற முட்டாள்தனமான எண்ணத்தை கார்பொரேட் கம்பெனிகள் தங்கள் விளம்பரம் மூலம் மக்களின் மனதில் விதைத்ததன் விளைவு...... பெண் குழந்தைகள் 7 -8 வயதில் பருவமெய்தி விடுகிறார்கள்..... மேலும் அவர்களின் உடல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது.... ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தைக்கு புடவை கட்டினால் அவர் சுமார் இருபது வயதிற்கான உடல் வளர்ச்சியுடன் தெரிகிறார்.....
இதை சினிமாவில் ரசிக்கலாம்.. ஊதா கலரு ரிப்பன்.. யார் உனக்கு அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடினால் ரசிக்கலாம்.... ஆனால் நம் பக்கத்து ஊரில், தெருவில், வீட்டில்.. ஏன்.. நம் வீட்டிலேயே கூட நடந்தால் ரசிக்க முடியுமா????/

ஏற்கெனவே திருமணமான 37 வயது ஆசிரியர் ஒருவர் , தன்னிடம் படித்த 15 வயதான மாணவியை திருமணம் செய்துகொண்டாராம்..

நாமும் வழக்கம் போல நெருப்பிற்கான அடித்தளம் எது என்று ஆராயாமல்... அந்த வாத்தி பயல வெட்டனும்.. நறுக்கணும் என்று பொங்கி விட்டு வேறு வேலையை பார்ப்போம்... இன்னொரு சம்பவம் நடக்கும் போது விட்ட இடத்திலிருந்து பொங்கிக்கொள்ளலாம்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக