செவ்வாய், 28 ஜூலை, 2015

தனியார் தொலைகாட்சி "கட்டபஞ்சாயத்து







தனியார் தொலைகாட்சிகளில் நடக்கும் "கட்டபஞ்சாயத்து" நிகழ்ச்சிகளில் (சொல்வதெலாம் உண்மை, நித்ய தர்மம் -வாய்மையே வெல்லும் போன்றவை) கலந்துகொள்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே...

பணக்காரவர்க்கத்தில் இதை விட கேவலங்கள் எல்லாம் நடக்கின்றன.. ஆனால் அவர்களிடம் இருக்கும் பணம் அதை மறைத்துவிடும்... அல்லது.. அந்த பணவசதியை பயன் படுத்தி அதையே கௌரவமான விஷயமாக மாற்றி விடுவார்கள்..

ஆனால் ஏழை வர்க்கத்தை பொறுத்தவரை "குடும்ப மானம்" என்பது தான் பெரிய மூலதனம்.. இதனாலேயே பல கௌரவ கொலைகள்-தற்கொலைகள் என்ற அளவிற்கு கூட அவர்கள் துணிவார்கள்.

அப்படி மானத்திற்காக கொலை/தற்கொலைக்கு கூட தயங்காத அடித்தட்டு வர்க்கம் இப்படி குடும்ப மானத்தை ஊரறிய சிரிக்க வைக்க எப்படி சம்மதிக்கிறது??? அவர்கள் அழுவதை-அடித்துக்கொள்வதை ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கிறார்கள் என சப்பை கட்டு கட்ட முடியாது... ஏனென்றால் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அப்படி நடப்பதை பார்த்துவிட்டுத்தான் புதிது புதிதாய் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியாதா என்ன.. நம்மையும் இப்படி எல்லோரும் பார்ப்பார்கள் என்று???

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்.. விளம்பர மோகம் மானம் மரியாதையை விட அதிக முக்கியத்துவம் பெற தொடங்கிவிட்டது... கலாச்சார சீரழிவின் மற்றொரு கோர முகம் இது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக