செவ்வாய், 28 ஜூலை, 2015

மார்கெட்டிங் தந்திரம்- தொடர் மின்வெட்டு




கோகுலத்தில் சீதை படத்தில் ஒரு காட்சி வரும்... திரு.மணிவண்ணன்/கார்த்திக் வைத்திருக்கும் குழந்தைகளுக்கான பால் பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தின் விற்பனையை கூட்ட செல்வி. சுவலட்சுமி ஒரு யோசனை சொல்வார்... அதாவது பால் டின்னுடன் கொடுக்கும் கரண்டியின் அளவை சற்று பெரிதாக ஆக்க சொல்லுவார்.. அப்படி பெரிதாக்குவதன் மூலம் தினசரி உபயோக அளவு அதிகமாகும் என்றும்.. அதனால் ஒரு மாதம் வர கூடிய பால் பவுடர் 25 நாட்களிலேயே முடிந்து விடும் என்றும் , இதனால் விற்பனையின் அளவு கூடும் என்றும் சொல்வார்...

இதுதான் மார்க்கெட்டிங் யுக்தி...

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பற்பசை உபயோகிப்பவர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பார்கள்.. பற்பசை வெளிவரும் துவாரத்தின் விட்டம் இப்போது அதிகமாக்கப்பட்டிருப்பது தெரியும்.. இதனால் உபயோகிக்கப்படும் பற்பசை அளவு அதிகமாகும்... பற்பசை எவ்வளவு அதிகம் உபயோகித்து விட போகிறோம் என்று நினைக்கலாம்.. அஞ்சு பேரு அஞ்சு அஞ்சு காசா அஞ்சு வருஷம் திருடினா என்ற அந்நியன் வசனத்தை நினைவில் கொள்ளவும்..
சரி... விஷயத்திற்கு வருவோம்... ( அப்படியானால் இன்னும் விஷயத்திற்கு வரவே இல்லையா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா... இவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்ல முடிச்சு போடுவான்... என்று சலித்துக்கொள்வதை தவிர்த்து மேலே படிக்கவும்.. மேலே என்றால்.. மறுபடியும் முதலில் இருந்து அல்ல.. தொடர்ந்து படிக்கவும் )

கலந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் டி வி , வாஷிங் மெஷின், மிக்சி, கம்ப்யூட்டர் போன்ற மின்சார பொருட்கள்/மின்னணு சாதனங்களின் விற்பனை சக்கை போடு போடுகிறது.. இந்த மின் பொருள் தயாரிக்கும் நிறுவனகள் எல்லாம் பில்லியன்-ட்ரில்லியன் டாலர்களில் வர்த்தகம் செய்யும் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்கள்... நான்கைந்து தம்பதிகள் ஒன்றாக கூட்டுக்குடும்பமாக வசித்தால் ஒரு டி வி, ஒரு மிக்சி, ஒரு வாஷிங் மெஷின், ஒரு கிரைண்டர், ஒரு ஃபிரிட்ஜ் போதுமானது... இந்த கூட்டு குடும்பத்தை பிரித்து நான்கு-ஐந்து தனித்தனி குடும்பமாக்கினால் நான்கு டி வி, நான்கு வாஷிங் மெஷின் என்று ஒவ்வொரு பொருளும் நான்கு நான்காக விற்பனை ஆகும்...
விளம்பரங்கள், சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் "நாகரீகம்" என்ற மாயையை உற்பத்தி செய்து ஒருவரோடு ஒருவரை பேச விடாமல் செய்து பொறாமை உணர்ச்சியையும், சுயநலத்தையும் வளர்த்து.. இன்றளவில் பெற்றோர்கள் (மாமனார் -மாமியார்) உடனிருப்பதையே பாரம் என நினைக்க வைத்து எல்லா குடும்பங்களையும் பிரிக்கும் செயலில் வெற்றி கண்டிருக்கின்றன அந்த நிறுவனங்கள்...

நம் வீட்டு பொருளை திருடுகிறான் என்று தெரியாமல் சாக்லெட்டிற்கு ஆசை பட்டு திருடனுக்கு துணை போகும் குழந்தைகள் மாதிரி நவ நாகரீக நங்கைகள் நான் திருமணம் செய்துகொல்வதென்றால் (எழுத்துப்பிழை அல்ல) மாமனார்- மாமியார் இருக்க கூடாது என்று கண்டிஷன் போடும் அளவிற்கு வளர்ந்திருப்பது கண்கூடு...

சரி.. கூட்டுக்குடும்பங்களை பிரித்து நான்கு டி வி, நான்கு வாஷிங் மெஷின் விற்பனை செய்தாயிற்று... அடுத்து என்ன செய்வது?? விற்பனை எப்படி பெருகும்... இது அடுத்த கட்டம்... ஆட்சியாளர்களுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் பணத்தை அள்ளி இறைத்தால் அவர்கள் மக்களுக்காக வழங்கும் மின் சேவையில் குளறுபடி செய்வார்கள்... ஒரு மின் சாதனம் 220-240 வோல்ட் என்ற மின்னூட்ட அளவில் தயாரிக்கப்படதென்றால் அதே அளவில் சீரான மின்னூட்டம் கிடைத்தால் மட்டுமே சரிவர நீடித்து இயங்கும்... இந்த மின்னூட்ட அளவை திடீரென 140V அளவிலோ... திடீரென 240V அளவிலோ மாற்றி மாற்றி கொடுக்கும் போது அந்த மின் சாதணங்கள் எளிதில் பழுதாகும்... வேறு வழி இல்லாமல் உபயோகித்து பழக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் வாங்கித்தான் ஆக வேண்டும்..

இப்போது புரிகிறதா மார்கெட்டிங் யுக்தி...??

நாம் வழக்கம் போல ஏமாறுவோம்... இந்த உலகம் பணக்காரர்களுக்காக மட்டுமே சுற்றும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக