புதன், 28 ஜூன், 2017

லயன் ஷேர்

பெண்சிங்கம் வேட்டையாடி முடித்து , இரையை உண்ணத் தொடங்கும் முன்பு அங்கு வரும் ஆண் சிங்கம் , அந்த பெண் சிங்கத்தை விரட்டிவிட்டு, தான் உண்ணத் தொடங்குமாம்...

பசி அடங்கிய பின்பு மிச்சமிருப்பதுதான் வேட்டையாடிய பெண் சிங்கங்களுக்கு கிடைக்குமாம்...
(நீ பார்த்தியான்னு கேக்க கூடாதுன்னுதான் "மாம்" "மாம்"ன்னு போட்டிருக்கேன்..)

உழைக்காமல் பலனை அனுபவிப்பது ஆண் சிங்கம்... இதற்கு ஆங்கிலத்தில் லயன் ஷேர் என்பார்கள்.. பல நிறுவனங்களில், தொழில்களில் கூட இப்படியான ஆட்கள் உண்டு...


தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்தால் "சிங்கக்குட்டி"பொறந்திருக்கு என்று பெருமையாக சொல்லிக்கொள்வார்கள்... உள்ளபடியே பார்த்தால் இது ஒரு ஏமாற்று வார்த்தை....வஞ்சப்புகழ்ச்சி...


நியாயமாய் சிங்கக்குட்டியாக இருந்தால் (அதாவது ஆண் சிங்கம்) உழைக்காமல், பெண்கள் கொண்டுவரும் சம்பாத்தியத்தில் முதலில் தனன் தேவையை பூர்த்தி செய்த பின்புதானே மற்றவர்களுக்கு விட்டு வைக்கக் வேண்டும்???

ஆனால்.. நிகழ்வில் இருப்பது அதற்கு முற்றிலும் எதிரானதுதானே???

ஆண்குழந்தை பிறந்த உடனே இப்படி ஒரு வார்த்தையை மட்டும் கேட்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்....

ஏ...... ஆண் வர்க்கமே.... இன்னும் எத்தனை காலம் இப்படி வெறும் வார்த்தை புகழ்ச்சிக்கு மயங்கப்போகிறாய்????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக