புதன், 28 ஜூன், 2017

ஒரு சாமான்ய விவசாயியின் மரணகால செய்தி...

நிகழ்வில் இருந்து மறைந்து போன பல விஷயங்களை சினிமா-தொலைக்காட்சி வழியாக பார்க்கும்போது அந்த நாள் ஞாபகங்கள் வரும்...

உதாரணமாக, சேரன் ஆட்டோகிராஃப் படம் எடுத்தபோது அதை பார்த்த இள வயதுகாரர்களை விட நடுத்தர மற்றும் முதிர்ந்த வயதுடையவர்களே அதிகம்.... அதற்கு காரணம் அந்த ஆட்டோகிராஃப் ஒவ்வொருவரின் வாழ்விலும் பல வருடங்கள் முன்பு நடந்த , திரும்ப அனுபவிக்கவே முடியாத விஷயங்களை கிளறி விட்டது... தங்கர் பச்சானின்"அழகி"யும் அப்படித்தான்....

அதாவது பழைய நினைவுகளை கிளரறிவிடக்கூடியவை வெற்றி பெரும் என்ற சித்தாந்தம் தான் பாரதம பிரதமரின் "விவசாயிகளுக்கான தனி தொலைக்காட்சி சேனல்" அறிவிப்பும்...

பாதி பேரை அழித்து விட்டோம்.. மீதி பேர் தாமாகவே ஓடும்படி செய்தாயிற்று.... எஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்சமும் கூடிய சீக்கிரம் தற்கொலை செய்துகொள்வார்கள்.... அப்புறம் விவசாயம் என்பது பழைய நினைவுகளை கிளறிவிடும் விஷயமாகபோய்விடுமல்லவா???.

இதில் இன்னொரு விஷயம்.... சேரனுக்கோ- தங்கர் பச்சானுக்கோ வெற்றியின் சதவிகிதம் குறைய வாய்ப்பு இருந்தது.. ஏனென்றால் அவர்கள் கிளறிய காதல் சமாச்சாரத்தை சமகால இளைஞர்கள் அனுபவ பூர்வமாய் உணர்ந்திருந்தார்கள்.. அல்லது இனிமேல் கண்டிப்பாய் அந்த அனுபவத்திற்கு ஆட்படுவார்கள்...

ஆனால் மோடி அவர்களின் திட்டமோ... இளைஞர்களையும் சேர்த்தே வசப்படுத்தும்.... இப்போதுள்ள இளைஞர்களுக்கு எக்காலத்திலும் விவசாயிகளை பார்க்கும் அனுபவம் தான் கிடைக்கவே கிடைக்காதபடி மொத்தமாய் அழித்துவிட்டோமே....

ஒரு சாமான்ய விவசாயியின் மரணகால செய்தி....
"வாழ்க வளமுடன்....!!!!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக