புதன், 28 ஜூன், 2017

லீ குவான் யூ


சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ அவர்கள் மறைந்ததற்கு எங்கள் பகுதியின் பெரும்பாலான கிராமங்களில் அஞ்சலிப் பதாகைகள், இரங்கல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நிகழ்த்துகிறார்கள்...

நன்றி உணர்ச்சியின் மொத்த வெளிப்பாடு இது.. எங்கள் பகுதி இன்று இந்த அளவிற்கு வசதி வாய்ப்போடு இருப்பதற்கும் (+).. என் போன்ற இளைய தலை முறை இளமையை தொலைத்தும் திரைகடலோடும் கனவுக்குள் விழுந்ததற்கும் (-) எங்கள் பகுதி மக்களின் பல்லாண்டுகால வெளி நாட்டு தொடர்புகள் தான் காரணம்.. அதில் மிகவும் தொன்மையானது சிங்கப்பூர்....




அங்கு நிலைகொண்டிருக்கும் மக்கள் தத்தம் கிராம முன்னேற்றத்திற்கும், பள்ளி, கோயில் போன்ற பொதுப்பணிகளுக்கும் அங்கு சேர்த்த செல்வங்களை அள்ளிக்கொடுத்ததற்கு காரணம்., அவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை அதில் நிலைகொள்ளச்செய்ய திரு லீ குவான் யூ அவர்கள்தான் அடித்தளம் அமைத்து உறுதுணை நின்றார்கள் என்ற நன்றிப்பெருக்கே இன்று பதகைகளாகவும், ஊர்வலமாகவும் வெளிப்படுகிறது....

சிங்கப்பூருக்கும் எமக்கும் நேரடியாக எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும்.. எம்பகுதிக்கும், எம் மக்களுக்கும் இருக்கும் நன்றி உணர்ச்சியின் கூட்டோடு.. எமது வருத்தங்களையும் பதிவிடுகிறோம்.....

எங்க பகுதி எங்கபகுதின்னு சொல்றியே... உங்க ஊர்ல யாரும் இல்லையா...?? உங்க ஊர்ல பதாகைகள் எதுவும்....????

ம்க்கூக்கும் ......இருந்தார்.,.. ஒரே ஒருத்தர் இருந்தார்.. அவரும் இறந்து போய்ட்டார்... மத்தவங்க எல்லாம் சொந்த ஊர்காரன பார்த்தாலே டீ வாங்கி கொடுக்கனுமோன்னு பயந்து சந்துக்குள்ள ஒளிஞ்சுகிற நல்லவனுங்க.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக