புதன், 28 ஜூன், 2017

இவர்கள் இந்தியப் பெண்கள்..





"கற்பழிப்பை தவிர்க்க முடியாது என்று தெரிந்துவிட்டால்.... சேர்ந்து அனுபவித்து விடு"

இது ஒரு ஆங்கில பழமொழியின் தமிழாக்கம்.... ஆனா இந்த பழமொழிய எதிர்த்து எந்த ஆங்கிலேய பெண்கள் இயக்கமும் போராடினதா தெரியல....

"அந்த பொண்ணு ஒத்துகிட்டிருந்தா கொலை வரைக்கும் போயிருக்க மாட்டோம்"ன்னு அவன் பேட்டி கொடுத்தா இங்க கோபத்துல குமுறுறாங்க....

என்ன காரணம்னு யோசிச்சு பார்த்தா..... என்னதான் வெள்ளைக்காரிங்க மாதிரி குட்டை பாவாடையும், லெக்கின்சும் போட்டுக்கிட்டு ராத்திரி பதினோரு மணிக்கு மேல பப்புக்கு போற அளவுக்கு வந்திருந்தாலும், உள்ளுக்குள்ளயே உறைஞ்சிருக்குற "இந்தியப்பெண்"அப்படிங்கிற பாரம்பரிய கலாச்சாரம் தான் இப்படி கோபப்பட வைக்குது....



பெண் சுதந்திரம், மேற்கத்திய நாகரீகம், குட்டை பாவாடை எல்லாம் இந்த கார்பொரேட் சைத்தான்கள் போடற பிச்சைக்காச வாங்கிகிட்டு ஊடக பிசாசுகள் ஏற்படுத்தி வச்சிருக்கிற மாய வலை..... அந்த மாய வலைதான் உண்மைன்னு நினைச்சுகிட்டு நம்மூர் பொண்ணுங்க ராத்திரி பதினோரு மணிக்கும் மேல எங்கள வெளில நடமாட விடறது இல்ல.... எங்களுக்கு சுதந்திரம் இல்லன்னு முட்டாள்தனமா உளறினாலும், சந்தர்ப்பம் வரப்போ இயல்பு நிலைக்கு திரும்பிட்றாங்க....

எத்தனயோ மொழிகளை சரளமா பேசத் தெரிஞ்ச ஒருத்தன்,, வலிக்கும்போது மட்டும் தாய்மொழில கத்துவானாம்.... அப்படித்தான் இது..... இதுதான் ஒரிஜினாலிட்டி....

ஒரு வெள்ளைக்கார பொம்பளைய, அறிமுகமில்லாத ஒரு ஆண் அணுகி, இன்று ஒருநாள் இரவை என்னோடு கழிக்கிறாயா... என் கேட்டால்... அந்த பெண் விருப்பம் இருந்தால் ஒப்புக்கொள்வாள்.... இல்லை என்றால்..."சாரி....." என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள்.....

அதே நம்மூர் பெண்ணிடம் அப்படி கேட்க முடியுமா..... கேட்டால் என்ன ஆகும்.. ஒன்று அந்த பெண்ணே செருப்பை கழட்டி அடிப்பாள்.... இல்லை என்றால்.... அண்ணன்- தம்பி- கணவன் என்ற ஆண் துணைகளை விட்டு அடிக்கச்சொல்வாள்.... ஏனென்றால்... ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் ஆழ்மனதில் ஊறிப்போன கலாச்சாரம்..... உரிமை உள்ளவன் மட்டுமே ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று காலம் காலமாய் நாம் ஏற்படுத்திய பழக்கம்...

கார்பொரேட் விளம்பர மோகத்தில் ஏமார்ந்து மேற்கத்திய கலாச்சார வர்ணம் பூசிக்கொண்டு இருந்தாலும் கூட, நேரடியாய் சீண்டப்படும்போது ஒரு பெண்ணுக்குள் உறைந்திருக்கும் இந்திய பெண் விழித்துக்கொள்கிறாள்....

அந்த இந்தியப்பெண்ணின் சீற்றம் தான் இந்த கோபம்....!!! இந்த கோபத்திற்கு முன்னால் கார்பொரேட் சைத்தான்களின் மாயவலை வெகுகாலம் நிலைக்க முடியாது....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக