புதன், 28 ஜூன், 2017

தாகூரும் - கவிதையும்.

  


ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒருமுறை பவுர்ணமி இரவில், கங்கை நதியில் படகுப்பயணம் செய்த படி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கவிதை எழுத யோசித்தபடி இருந்தாராம்...

கீதாஞ்சலிகாக நோபல் பரிசை அள்ளி வந்த தாகூருடன் கவிதை கண்ணாமூச்சி ஆடியதாம்.... ஒரு வரி கூட எழுத முடியாத நிலையில் மெழுகு வர்த்தியை அணைத்துவிட்டு மல்லார்ந்து படுத்த படி வானத்தை ரசிக்க ஆரம்பித்தாராம்..

நட்சத்திர தோழிகளுடன் உலாவரும் இளவரசி பவுர்ணமி நிலா... சில்லென்ற காற்று... கங்கை நதியின் சல சலப்பு.... படகோட்டியின் நாட்டுப்புற பாடல்.... தாகூருடன் இப்போது கவிதை கலவி செய்ய தயாரானதாம்....

தாகூருக்கு மெழுகுவர்த்தி..... நம்மில் நிறைய பேருக்கு ஆண்ட்ராய்ட் / லேப்டாப்

ரசிப்பதற்கான விஷயங்களை இந்த சில்லறை வெளிச்சம் தடை செய்து கொண்டே இருக்கிறது... உலகம் ரொம்ப பெரியது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக