புதன், 28 ஜூன், 2017

தாது வருட பஞ்சம்










18 ம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தில் சற்றேறக்குறைய 14 ஆண்டுகள் மழையே பெய்யாமல் வானம் வஞ்சித்து விட... பஞ்சம் ஆடிய கோரத்தாண்டவத்தில் மடிந்தவர்கள் லட்சங்களில் ......

தமிழர் வரலாறு இதை தாது வருட பஞ்சம் என்று நடுக்கத்தோடு நினைவு கூறகிறது...

அந்த பஞ்ச காலத்திலும் உயிர் உற்பத்தி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.... நாமே உயிர் பிழைப்போமோ இல்லையோ..... நாம் பெற்றுப்போடுவதை யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்து நம் முன்னோர்கள் உயிர் உற்பத்தியை நிறுத்தி இருந்தால்... இன்று நீங்களோ- நானோ இல்லை...

(அந்த காலகட்டத்தில் தான் மதுரை பகுதியில் கஞ்சித்தொட்டி அறிமுகமானது.... ஒரு தாசியின் தயவால்.... இந்த தாசி பற்றி நான் ஏற்கெனவே எழுதி இருப்பது உங்கள் ஞாபகத்தில் இருக்கலாம்-"கஞ்சித்தொட்டி - குஞ்சரம்மாள்"  )

நம்பிக்கை.... அதானே எல்லாம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக