புதன், 28 ஜூன், 2017

நிலநடுக்கம் ஏன் வருகிறது

 


நிலநடுக்கம் ஏன் வருகிறது என்பதற்கு ஆயிரம் விளக்கங்களை அறிவியல் கொடுக்கும்.... அதை தாண்டிய மனச்சாட்சி கொடுக்கும் விளக்கம் இது...

ஒரு மனச்சாட்சி உள்ள கிராமத்தான் பார்வையில் நிலநடுக்கத்தை இப்படி எளிதாக விவரிக்கலாம்... மாடுகள் தங்கள் உடம்பின் மீது ஏதேனும் ஈ அமர்ந்து கடிக்கும் போது அந்த ஈயை விரட்டுவதற்காக அந்த இட்டத்தின் தோலை மட்டும் அதிர்வுற செய்யும் படி உலுக்கும்... அப்போது அங்கே அமர்ந்து கடிக்கும் ஈ ஓடிவிடும்....
அதுதான் நிலநடுக்கம்... தன் உடம்பில் இருந்து கடித்த ஏதோ ஒரு ஈயை (பூமிக்கு எதிரான நாசகார சக்தியை ஒழிக்க) விரட்டுவதற்கு பூமாதேவி தன்னுடைய தோலை அதிர்வுற செய்வதே நிலநடுக்கம்...

இதில் துரதிஷ்டமான உண்மை... அந்த கொடும் ஈயை விரட்டும் முயற்சியில் நல்லோரும் அழிந்துபோவதுதான்...

உலகம் இப்படித்தான் தன்னை சமப்படுத்திக்கொண்டு சுழன்று கொண்டே இருக்கிறது....


(தசாவதாரம் படத்தில் கெமிக்கல் விஷம் பரவாமல் ஒரே நேரத்தில் உப்புத்தண்ணீர் தெளிக்கக வேண்டி ஆழிப்பேரலை சுனாமியாய் ஊருக்குள் ஊர்வலம் நடத்தியது என்ற கற்பனையும் - ஒருவேளை அப்படி எதுவும் நடந்துகூட இருக்கலாம்.... எவர் கண்டார் - இந்த அப்பாவி விவசாயியின் கற்பனையும் ஒன்றுதான்.... இறைவன் எதையோ தடுக்க சில அழிவுகளை மேற்கொள்கிறான்...)

கூடுமான வரையில் பாவத்தை தவிருங்கள்.... உலகம் உய்யும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக