புதன், 28 ஜூன், 2017

விவசாய தொழிலதிபர்கள்..!!!

எந்த பொருளை தயாரிக்கிற நிறுவன முதலாளியும் அவருடைய தொழிலகத்தில் தயாரான குறையுள்ள பொருளை தன்னுடைய உபயோகத்திற்காக வைத்துக்கொள்ள மாட்டார் ....


உதாரணமா ஒரு கார் தயாரிக்கிற கம்பெனிக்காரன் அவன் கம்பெனில தயாரிச்ச கார்ல எது நசுங்கி போய் இருக்கோ அத தன்னோட உபயோகத்துக்கு வச்சுக்க மாட்டான்....


அந்த முதலாளியின் உபயோகத்திற்கென பிரத்யோக கவனத்துடன் சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொருளை தான் உபயோகிப்பார்....


ஆனால் விவசாயியோ.... விதை போட்டு, நீரூற்றி, கண்ணும் கருத்துமாய் கவனித்து விளைச்சலை அறுவடை செய்து , விளைந்த பொருளில் பூச்சி, சொத்தை, கோணல், நொள்ளை என்று கழிவுகளாக தன்னுடைய உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டு நல்ல பொருட்களை சந்தைக்கு அனுப்புவான்...


அட பிச்சைக்கார விவசாயிங்களே.... இப்போ புரியுதா.. உங்கள எவனும் ஏன் தொழிலதிபர்ன்னு சொல்ல மாட்டேங்கிறான்னு...???

விளையிறதுல நல்ல தரமான பொருளா உங்க வீட்டு குழம்புக்கோ, கறிக்கோ எடுத்துகிட்டு மிச்சம் இருக்கிறத மட்டும் விற்பனைக்கு அனுப்புங்க.... இன்னும் ஒரு படி மேல போய் அந்த பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்ற வழிமுறைகளை செயல்படுத்துங்க.... இடைத்தரகர்கள் இல்லாம நேரடியா சந்தைப்படுத்துற முயற்சியில இறங்குங்க....

அதுக்கப்புறம் பாருங்க.. அவன் ராக்கெட் தயாரிக்கிற கம்பெனி வச்சிருந்தாலும் உங்க காலடிக்கு கீழதான்... நீங்கதான் உலகத்துலேயே முதல் தொழிலதிபர் தரம் உடையவங்க....!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக